தமிழக தனியார் பள்ளியில் 3 மாணவிகளுக்கு கொரோனா தொற்று – பெற்றோர்கள் கவலை!
தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 3 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மாணவர்களுக்கு கொரோனா:
தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு செப்டம்பர் 1ம் தேதி முதல்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரை மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அன்று முதல் பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு இன்னும் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் 18 வயதுக்கு கீழ் உள்ள மாணவர்களை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்க அரசின் நோய்த் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது மட்டுமே கொரோனாவிலிருந்து தப்பிக்க ஒரே வழியாகும்.
கொரோனா 3 ஆம் அலை, பள்ளிகளை திறப்பதில் கவனம் தேவை – ICMR விஞ்ஞானி தகவல்!
அதன்படி பள்ளிக் கல்வித்துறை நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அவற்றை மாணவர்கள் பின்பற்றுகின்ற போதிலும் கொரோனா தொற்று ஏற்படுவது மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகள் தொடங்கப்பட்ட நாள் முதல் தினந்தோறும் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கொரோனா என்ற செய்தி தான் அதிகம் வெளியாகி வருகிறது. ஏற்கனவே கொரோனா மூன்றாம் அலை குழந்தைகளை தாக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
அண்ணா பல்கலை ஆட்சி மன்றக்குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் – சபாநாயகர் உத்தரவு!
இந்த நிலையில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவது மூன்றாம் அலை தொடக்கம் என்று மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. இன்று திருப்பூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 3 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பிற மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் அதிகரிக்கும் கொரோனா தொற்றால் மீண்டும் பள்ளிகள் மூட கூடிய சூழல் உருவாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.