தமிழக தனியார் பள்ளிகளில் அரையாண்டுத்தேர்வு – கல்வித்துறையின் முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு இன்று முதல் அரையாண்டு தேர்வு தொடங்கியுள்ளது. இந்த தேர்வின் போது தனியார் பள்ளிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அரையாண்டு தேர்வு:
தமிழகத்தில் கொரோனா தாக்கத்திற்கு பிறகு நடப்பு கல்வி ஆண்டு வழக்கம் போல நடைபெற்று வருகிறது. தமிழக தனியார் பள்ளிகளுக்கு இன்றும் (டிசம்பர் 12) அரசு பள்ளிகளுக்கு டிசம்பர் 16ஆம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்திருந்தது. அதன்படி இன்று முதல் கட்டமாக தனியார் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு துவங்கி உள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இதனை அடுத்து வேலூர் மாவட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தனியார் பள்ளிகள் தேர்வின் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் பள்ளிக்கல்வித்துறையின் கால அட்டவணைப்படி உரிய நேரத்தில் அரையாண்டுத்தேர்வை பள்ளிகள் நடத்த வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் வினாத்தாள் தேர்வுக்கு முன்பாக வெளிவர கூடாது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு புதிய பாட நூல்கள் – பள்ளிக்கல்விதுறைக்கு அரசு உத்தரவு!
Exams Daily Mobile App Download
குறிப்பாக வினாத்தாளை தங்களின் மொபைல் போனில் புகைப்படம் எடுக்க கூடாது என்று முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். ஏனெனில் பள்ளி ஆசிரியர்கள் அல்லது பிற பணியாளர்கள் வினாத்தாளை தேர்வுக்கு முன்னால் புகைப்படம் எடுக்கும் போது அவை சமூக வலைதளங்களில் தேர்வுக்கு முதல் நாளே வெளியாகும் அபாயம் உள்ளது. இதனை தடுக்கவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.