தமிழக மாற்றுத்திறனாளிகளுக்கு அரிய வாய்ப்பு – டிச.18 வேலைவாய்ப்பு முகாம்! ஆட்சியர் தகவல்!
திருவாரூர் மாவட்டத்தில் வரும் டிசம்பர் 18ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து அம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வேலைவாய்ப்பு முகாம்
தமிழகத்தில் அரசு துறையை தொடர்ந்து தனியார் துறைகளும் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் வாரம் தோறும் அல்லது மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பணி நியமனம் நடைபெற்று வருகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் கடந்த ஒரு வருடங்களில் மட்டும் ஏராளமானோர் பல முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெற்று பணியாற்றி வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலைவாய்ப்பை வழங்கும் பொருட்டு தனியார் துறைகள் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் வரும் டிசம்பர் 18 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்த மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அத்துடன் தொண்டு நிறுவனங்கள் ஆகியவை இணைந்து தனியார் வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளோம்.
Truecaller: இந்தியாவில் அரசு சேவைகள் அறிமுகம் – இனி முறைகேடுகளில் ஈடுபட முடியாது!!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
வரும் 18ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மாவட்டத்தில் அமைந்துள்ள அம்மையப்பன் பாரத் கல்வியியல் கல்லூரியில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் திருமணம் செய்து கொள்ள விரும்பும் மாற்றுத்திறனாளி மக்களுக்கு திருமணம் செய்து வைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். அதனால் அவர்களின் முகாமில் கலந்து கொண்டு தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.