தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் ஜூன் . 9ம் தேதி மின்தடை – மின் வாரியம் அறிவிப்பு!
தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை (ஜூன். 09) சாக்கோட்டை துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை :
தமிழகத்தில் மாவட்டம் தோறும் அனைத்து துணை நிலையங்களிலும் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இத்தகைய பணிகள் காரணமாக குறிப்பிட்ட நேரம் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (ஜூன். 09) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சாக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக முக்கிய பணிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.
தமிழக பள்ளி வாகனங்களில் கேமராக்கள் பொருத்த வேண்டும் – முக்கிய அறிவிப்பு!
அதாவது திருநறையூர் பீடர் வாயிலாக மின் விநியோகம் பெறும் சாக்கோட்டை, கிருஷ்ணாபுரம், அழகாபுத்தூர், கருவிளச்சேரி, திருநறையூர் மற்றும் மேலக்காவேரி பீடர் வாயிலாக மின் வினியோகம் பெறும் பெரும்பாண்டி, காமராஜ்நகர், பழனிச்சாமி நகர் ஆட்டோநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (ஜூன். 09) காலை 9 மணி முதல் 3 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.