தமிழகத்தில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அரசு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்தில் காலியாக உள்ள அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீட்டு முகவர் பணியிடத்தை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வேலைவாய்ப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிப்படைந்தது. இதனால் ஏராளமானோர் தங்கள் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டனர். அத்துடன் அரசு சார்பாகவும் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளிவரவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து வேலைவாய்ப்பு அறிவிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி கொண்டு இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்தில் காலியாக உள்ள அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீட்டு முகவர் பணியிடத்தை நிரப்ப உள்ளதாக கோவில்பட்டி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் திவ்யா சந்திரன் தெரிவித்துள்ளார்.
இப்பணிக்கு 18 வயது முதல் 50 வயது வரை நிரம்பியவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தார்கள் 10ம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தால் நடத்தப்படும் தோ்வில் தோ்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் இதற்கு வேலைவாய்ப்பற்ற, சுய தொழில் செய்வோா், முன்னாள் ஆலோசகர்கள், முன்னாள் ஆயுள் காப்பீட்டு முகவர்கள், சுய உதவிக் குழுக்களில் செயல்படுவோர், கிராமத் தலைவர், கிராம சபை உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினா், அங்கன்வாடி மற்றும் மகிளா மண்டல பணியாளர்கள், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதில் தகுதியான நபர்கள் நோ்முகத் தோ்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதற்கு விண்ணப்பிக்க அருகில் உள்ள அஞ்சலகங்களில் விண்ணப்பங்களை பெற்று படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை முதுநிலை அஞ்சலகக் கோட்ட கண்காணிப்பாளர், கோவில்பட்டி கோட்டம், கோவில்பட்டி 628501 என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாக வருகிற மே 17ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் இது தொடர்பான விவரங்களை பெற தலைமை அஞ்சலகங்களின் 04632 220368 – கோவில்பட்டி, 04636 222313 – சங்கரன்கோவில், 04633 222329 – தென்காசி என்ற தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.