தமிழக அஞ்சல் துறையில் வேலை – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் !
கோவில்பட்டி அஞ்சல் கோட்டப் பகுதியில் காலியாக உள்ள அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவுடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TN Postal Circle |
பணியின் பெயர் | அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா் |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 22.09.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
அஞ்சல் துறை காலிப்பணியிடங்கள்:
அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா் பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
பதிவு செய்வோர் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அஞ்சல் துறை கல்வித்தகுதி :
மேற்கூறப்பட்டுள்ள அஞ்சல் துறை பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான அரசுத் தேர்வில் தோச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழக அஞ்சல் துறை ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோருக்கு காப்பீட்டு பிரிமியம் அடிப்படையில் கமிஷன் வழங்கப்படும்.
அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா் தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் வாயிலாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பங்களை அஞ்சலகங்களில் பெற்று, உரிய ஆவணங்களுடன் அதை பூா்த்தி செய்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு 22.09.2021 அன்றுக்குள் பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
முகவரி – முதுநிலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளா், கோவில்பட்டி 628-501.