தமிழக அஞ்சல் கோட்டத்தில் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! முழு விபரங்கள் இதோ!
தமிழகத்தில் காரைக்குடி அஞ்சல் கோட்டத்தில் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு நேரடி முகவர் பணியிடத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக காரைக்குடி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் பி. ஹுசைன் அகமது அறிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை பற்றி அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து காரைக்குடி அஞ்சல் கோட்டத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அஞ்சலக கண்காணிப்பாளர் பி. ஹுசைன் அகமது அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில் தெரிவித்தாவது, அஞ்சல் கோட்டத்தில் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு நேரடி முகவர் போன்ற பணியிடத்தில் தகுதியான நபர்களை நிரப்ப உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – இடமாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு!
இப்பணிக்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 50 வயது வரை நிரம்பியவராக இருக்க வேண்டும். அத்துடன் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இப்பணியிடத்திற்கு வேலை தேடிக்கொண்டிருப்பவா்கள், சுயதொழில் செய்பவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், முன்னாள் ராணுவத்தினா், மகளிர் மேம்பாட்டு ஊழியர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற மத்திய, மாநில அரசு அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம். அத்துடன் இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ரூ.5000 தொகையை எஎஸ்சி அல்லது கேவிபி பத்திரத்தை இந்திய ஜனாதிபதிக்கு ஈடு செய்து சமர்ப்பிக்க வேண்டும். இதனை அவர்களின் உரிமம் முடியும் போது திரும்ப வழங்கப்படும்.
நாடு முழுவதும் மின் கட்டணம் உயர்வு – மத்திய அரசின் அறிவுறுத்தல்! பொதுமக்கள் அதிர்ச்சி!
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்ய வேண்டும். இதையடுத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பான் அட்டை, ஆதார் அட்டை, முகவரி சான்று, கல்விச்சான்றுகளின் நகல்கள் உள்ளிட்டவைகளை இணைத்து அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், காரைக்குடி கோட்டம், காரைக்குடி – 630003 என்ற முகவரிக்கு பதிவு தபால் மூலமாக வருகிற 22ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற 04565 224548 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று அஞ்சலக கண்காணிப்பாளர் பி. ஹுசைன் அகமது தெரிவித்துள்ளார் .