தமிழக Post Office-ல் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு!
Postman and Mail Guard, Multi-Tasking-Staff பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அஞ்சல் துறையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் இந்த நல்ல வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழக Post Office வேலைவாய்ப்பு விவரங்கள்:
தமிழ்நாடு அஞ்சல் துறை அறிவிப்பின் படி Postman and Mail Guard, Multi-Tasking-Staff பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பிங் பார்வையிடவும். விண்ணப்பதாரர்கள் இரு சக்கர வாகனங்கள் ஓட்ட தெரிந்தவராகவும், Driving License வைத்திருப்பவராகவும் இருப்பது கட்டாயமானதாகும்.
Exams Daily Mobile App Download
01.01.2022 ம் தேதியின் படி இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 08.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.