தமிழக அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – மாதம் ரூ.62,000 வரை ஊதியம்!

0
தமிழக அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - மாதம் ரூ.62,000 வரை ஊதியம்!
தமிழக அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – மாதம் ரூ.62,000 வரை ஊதியம்!

தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், காரைக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் காலியாக உள்ள கார் டிரைவர் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு:

தமிழகம் கொரோனா மூன்றாம் அலையிலிருந்து மீண்டு வரும் நிலையில் அரசு மற்றும் தனியார் துறைகள் வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் அரசுத்துறை போட்டித்தேர்வுகளான குரூப் 2 தேர்வு அறிவிப்பு வெளியாகி அதற்கான விண்ணப்ப பதிவுகளும் நடைபெற்று முடிந்துள்ளது. அதனை தொடர்ந்து குரூப்4 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பலரும் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நேரத்தில் மற்ற துறைகளை தொடர்ந்து இந்திய அஞ்சல் துறையும் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

ராதிகாவை மட்டும் காப்பாற்றி கூட்டி வந்த கோபி – தனியாக தவிக்கும் பாக்கியா! சீரியலில் புதிய திருப்பம்!

அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறைகளில் காலியாக உள்ள அஞ்சல் காப்பீடு முகவர் பணியிடங்களுக்கான அறிவிப்பு அவ்வப்போது வெளியாகி வருகிறது. ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சுயதொழில் புரிபவர்கள் போன்றோர் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது மதுரை மண்டலத்தைச் சேர்ந்த திண்டுக்கல், காரைக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள அஞ்சல் துறை அலுவலகங்களில் காலியாக உள்ள கார் டிரைவர் பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேற்கண்ட மாவட்டங்களில் மொத்தம் 4 கார் டிரைவர் காலிப்பணியிடங்கள் உள்ளது என்றும் இப்பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் 56 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் கட்டாயம் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். அவர்கள் தங்களது சுய விவர குறிப்பு மற்றும் ஆவணங்களை The Manager, Mail Motor Service, Tallakulam, Madurai – 625 002 என்ற முகவரிக்கு மே 21ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். தேர்தெடுக்கபடுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.18,000 – 62,000 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!