தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு – அரசு ஊழியர் பணி இடைநீக்கம்!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு - அரசு ஊழியர் பணி இடைநீக்கம்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு - அரசு ஊழியர் பணி இடைநீக்கம்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு – அரசு ஊழியர் பணி இடைநீக்கம்!

தமிழகத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள் கொள் முதல் செய்யும் போது பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துவதில் அலட்சியமாக செயல்பட்ட தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளரை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு:

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சிறப்பாக பண்டிகையை கொண்டாடும் பொருட்டும் அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு மற்றும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்து. அதன்படி கடந்த 4ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தினமும் 150 முதல் 200 குடும்பங்கள் வீதம் டோக்கன் முறையில் பரிசுத் தொகுப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு கொள்முதலில், விநியோகத்தில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம் அடுக்கடுக்கான புகார்கள் எழுந்து வருகிறது. அதாவது பரிசுத் தொகுப்பில் உள்ள பொருட்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், அவை தரமற்ற இருப்பதாகவும் ரேஷன் அட்டைதாரர்கள் அரசிடம் புகார் தெரிவித்தனர். இதனால் பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியவில்லை என்று பொதுமக்கள் கவலை தெரிவித்தனர். இந்த புகார்களின் அடிப்படையில் விசாரணை செய்யவும் தரமற்ற பொருட்களை வழங்கிய கொள்முதல் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டார்.

மத்திய அரசில் புதிய வேலைவாய்ப்பு 30+ காலிப்பணியிடங்கள் – ஒரு வருகைக்கு ரூ.4,500/- ஊதியம்..!

இதையடுத்து முறைகேடு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கொள்முதல் செய்த பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துவதில் மெத்தனமாக செயல்பட்ட தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளரை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனை தொடர்ந்து விரிவான விசாரணை அறிக்கை முதல்வரிடம் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வந்துள்ளது. அதனால் மேலும் சில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!