தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு – டோக்கன் வழங்கும் பணி தீவிரம்!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு - டோக்கன் வழங்கும் பணி தீவிரம்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு - டோக்கன் வழங்கும் பணி தீவிரம்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு – டோக்கன் வழங்கும் பணி தீவிரம்!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரொக்க பணம் மற்றும் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கனை விநியோகிக்கும் பணியில் ரேஷன் கடை ஊழியர்கள் இறங்கியுள்ளனர்.

டோக்கன்:

தமிழகத்தில் நடப்பு ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்க பணம் மற்றும் 1 கிலோ அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த பொருட்களை பெறுவதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணி தமிழகம் முழுவதும் தற்போது நடைபெற்று வருகிறது.

கடும் பனி பொழிவு எதிரொலி.. ஜன.7 வரை பள்ளிகளுக்கு விடுமுறை – ராஜஸ்தான் அரசு அறிவிப்பு!

ரேஷன் கடை ஊழியர்கள் நேரடியாக ரேஷன் அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று டோக்கன்களை வழங்கி வருகின்றனர். இந்த டோக்கனில் ரேஷன் அட்டைதாரரின் பெயர், பொருட்கள் வழங்கப்படும் தேதி மற்றும் நேரம் ஆகியவை இடம் பெற்றுள்ளது. இந்த டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாளில் ரேஷன் அட்டைதாரர்கள் கடைக்கு சென்று தங்களின் ரொக்க பணம் மற்றும் பரிசுத்தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

தற்போது ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை டோக்கன் வழங்கியதில் சுமார் 1,183 பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டோக்கன் விநியோகிக்கும் பணி வரும் ஜன.8ம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!