தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு 2022 – பாதுகாப்பு வழங்க கோரிக்கை!

0
தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு 2022 - பாதுகாப்பு வழங்க கோரிக்கை!
தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு 2022 - பாதுகாப்பு வழங்க கோரிக்கை!
தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு 2022 – பாதுகாப்பு வழங்க கோரிக்கை!

தமிழகத்தில் ஜனவரி 3ம் தேதி முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க உள்ள நிலையில் திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்கம் சார்பில் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு உள்ளது.

ரேஷன் கடைகளில் பாதுகாப்பு:

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி கார்டுதாரர்களுக்கு தமிழக அரசால் பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் இலவச வேட்டி சேலை வருடம் தோறும் வழங்கப்படும். இதன் அடிப்படையில் வரும் 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 3ம் தேதி முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த பரிசுத்தொகுப்பில் 21 வகையான பொருட்கள் துணி பையில் போட்டு பாதுகாப்பாக மக்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிப்பு காரணமாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.

SBI வங்கியில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க டிச.29ம் தேதி கடைசி நாள்!

அது என்னவென்றால் கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரொக்கப்பணம் 2500 ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் நிதி பற்றாக்குறை காரணமாக இந்த ஆண்டு பணம் பற்றிய அறிவிப்பு வராமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதன் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்க (சி.ஐ.டி.யு) நிர்வாகக்குழு, மாவட்ட தலைவர் கௌதமன் தலைமையில் ஒரு ஆலோசனை கூட்டம் நடந்தது . இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மகேந்திரன், பொருளாளர் சுரேஷ், மாவட்ட துணை தலைவர்கள் ராமு, கருப்பசாமி, துணை செயலாளர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள்.

தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலை சிறப்பான முறையில் பேக்கிங் செய்து அந்தந்த ரேஷன் கடைகளில் இறக்க வேண்டும் என்று கூறினார்கள். எனவே கூட்டுறவு அதிகாரிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளரிடம் கடுமையாக நடந்து கொள்ளாமல் மென்மையான போக்கை கடைபிடிக்க வேண்டும். பின்பு ஜனவரி 3ம் தேதி பொங்கல் பரிசுப்பொருள் வழங்க உள்ளதால் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பது நாம் அறிந்தவை. அதனால் ரேஷன் கடைகளில் கூடுதல் பணியாளரை நியமிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து ஓமைக்ரான் தொற்று அதிக அளவில் பரவி வருவதால் மக்கள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பிற்கு போதிய ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!