தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3184 காலிப்பணியிடங்கள் – அமைச்சர் பொன்முடி தகவல்
தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3184 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது குறித்த கூடுதல் தகவல்களை இதில் காண்போம்.
அமைச்சர் பொன்முடி தகவல்:
நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதி நிலை அறிக்கை மீதான விவாத நேரத்தில் அந்தியூரில் பலவகை தொழில்நுட்ப கல்லூரி துவக்க அரசு முன்வருமா என அரசுக்கு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரி என இரண்டு உள்ளது. அங்கு மொத்தம் 1150 மாணவர்கள் உள்ளதாகவும், அதில் இந்த ஆண்டு 438 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
வானில் மார்ச் 28 ஆம் தேதி தோன்றும் அதிசய காட்சி – மக்கள் வெறும் கண்ணில் 5 கிரகங்களை பார்க்கலாம்!
அதே போல் தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. அதை தடுக்கும் விதமாக மாணவர்கள் சேர்வதற்கான முயற்சியை அரசு எடுத்து வருவதாகவும் கூறினார். தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 6295 இடங்களில் 3184 இடங்கள் காலியாக உள்ளது. தொழில்துறை 4.0 திட்டத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க திறன்மிகு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.
Follow our Instagram for more Latest Updates
மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளிக்க ஆசியர்களுக்கு உலகத்தரமிக்க திறன்மிக்க 120 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு சென்னை அம்பத்தூரில் உலகளாவிய திறன் பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download