இறுதி ஆண்டு பருவத்தேர்வு வீட்டிலிருந்தபடியே எழுத வேண்டும் !! – சுற்றறிக்கை வெளியீடு
தமிழகத்தில் பாலிடெக்னிக் இறுதி ஆண்டு பருவத்தேர்வுவினை வீட்டில் இருந்தபடியே எழுத வேண்டும் என அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
இறுதி ஆண்டு பருவத்தேர்வு !
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெறாமல் ரத்து செய்யப்பட்டது. மேலும் அரியர் தேர்வுகள் உட்பட அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டதன் மூலம் பொறியியல், கலை, அறிவியல் என அனைத்து பாடப்பிரிவினை சேர்ந்த மாணவர்களுக்கும் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் தற்போது பாலிடெக்னிக் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டிலேயே தேர்வு !
அரசு பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தாங்கள் எழுத வேண்டிய தேர்வு, செய்முறை மற்றும் திட்ட கட்டுரை ஆகியவற்றினை தங்களின் வீட்டில் இருந்தபடியே தேர்வு எழுதுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு நேரம், அட்டவணை, விடைத்தாள் திரும்ப ஒப்படைத்தல் போன்ற ஏனைய தகவல்களை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்