தமிழ்நாடு காவல்துறையில் 7800 புதிய காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
கருர் மாவட்டம் – சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் கீழ் போலீஸ் பணியாளர்கள் (ஆயுதப்படைகள் இரண்டாம் காவலர், இரண்டாம் வகுப்பு தமிழ்நாடு சிறப்பு காவல்துறை, சிறை இரண்டாம் வகுப்பு காவலர் தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள்) பதவிகளுக்கு புதிய வேலை அறிவிப்பை அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி, 7800 காலியிடங்கள் கரூர் மாவட்டத்தால் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு 26.10.2020க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறுவனம் | கருர் மாவட்டம் – சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) |
பணியின் பெயர் | ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை காவலர் தமிழ்நாடு சிறப்பு காவல்படை, சிறைத்துறை இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் |
பணியிடங்கள் | 7800 |
Last Date | 26.10.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
சீருடை பணியாளர் தேர்வு வாரிய காலிப்பணியிடங்கள்:
கருர் மாவட்டம் 14.10.2020 அன்று வெளியிட்ட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, மொத்தம் 7800 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன் படி,
Category | Vacancies |
ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் | 695 |
இரண்டாம் நிலை காவலர் தமிழ்நாடு சிறப்பு காவல்படை | 6545 |
சிறைத்துறை இரண்டாம் நிலை காவலர் | 112 |
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் | 458 |
மொத்தம் | 7800 |
கரூர் மாவட்ட காலியிடங்களுக்கான தகுதிகள் 2020:
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
TNUSRB Police Constable Free Classes
வயது எல்லை:
01.07.2020 அன்று 45 வயதிற்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். 17.09.2017-க்கு பின்னர் படைப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் படைவீ ரர்கள் மேற்காணும் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல்முறை:
தேர்வு நேர்காணல் / சோதனையின் (TEST) அடிப்படையில் இருக்கலாம். இதை பற்றிய முழு விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 26-10-2020 ஆகும். இணையவழி மூலமாக விண்ணப்பம் (ஆன்லைன்) சமர்ப்பிக்க வேண்டிய இணையதள முகவரி: https://tnusrbonline.org/
குறிப்பு:
கரூர் மாவட்டத்தில் உள்ள தகுதிபடைத்த முன்னாள் படைவீரர்கள் இப்பணியிடங்களுக்கு பெருமளவு விண்ணப்பித்து பயனடையுமாறும், விண்ணப்பித்த முன்னாள் படைவீரர்கள் அதன் விவரத்தினை 27-10-2020-க்குள் திருச்சிராப்பள்ளி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு தெரியப்படுத்திடவும் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.த. அன்ழகன் இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார்.
Download Official Notification 2020 Pdf
Apply Online
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்