தமிழக காவல்துறை தேர்வு 2020 – கடைசி நாள் டிப்ஸ் இதோ !

0
தமிழக காவல்துறை தேர்வு 2020 - கடைசி நாள் டிப்ஸ் இதோ
தமிழக காவல்துறை தேர்வு 2020 - கடைசி நாள் டிப்ஸ் இதோ

தமிழக காவல்துறை தேர்வு 2020 – கடைசி நாள் டிப்ஸ் இதோ

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் ஆகிய பணிகளுக்கு முன்னர் அறிவிப்பு வெளியிடப்பட்டு பதிவுகள் நடைபெற்றது. தற்போது 11,741 காலியிடங்களை கொண்ட இப்பணிகளுக்கு தேர்வு நடைபெற உள்ளது. அந்த தேர்வினை எழுத உள்ள தேர்வர்கள் தேர்வறையில் நடந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து இங்கு தெளிவாக அறிவுறுத்தியுள்ளோம். இதனை நன்கு கவனமாக படித்து அதன் படி தேர்வு எழுதி வெற்றி பெற அனைவரையும் வாழ்த்துகிறோம்.

TNUSRB Police Constable Study Material
TNUSRB Police Constable தேர்வு தேதி:

இரண்டாம் நிலை காவலர் , சிறைக் காவலர் & தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான எழுத்து தேர்வானது நாளை (13.12.2020) நடைபெற உள்ளது. எழுத்து தேர்வு நடைபெறும் தேதி, இடம் பற்றிய விவரங்கள் தேர்வு நுழைவுச்சீட்டில் இடம் பெற்று இருக்கும்

TN PC தேர்வு நுழைவுச்சீட்டு:

தமிழக காவல் துறை தேர்வானது நாளை (13.12.2020) அன்று நடைபெற உள்ளது. 11741 பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டினை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளாலாம்.

TNUSRB Police Constable Hall Ticket

தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படும் பொருட்கள் :
  • விண்ணப்பதாரர்களின் அழைப்பு கடிதம் மற்றும் அசல் அடையாள அட்டை
  • நீலம் மற்றும் கருப்பு நிற பந்து முனை பேனா
தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படாத பொருட்கள் :
  • தேர்வு சம்பத்தப்பட்ட புத்தகங்கள், கைடுகள், விடைகள் அடங்கிய சிறு குறிப்புகள் மற்றும் மற்றும் தேவையில்லாத பொருட்கள்
  • செல்போன், கால்குலேட்டர் மற்றும் ப்ளூடூத் போன்ற எலக்ட்ரானிக் உபகரணங்கள்

Download Syllabus || Previous Year Question Paper

தேர்வர்களுக்கான பொதுவான விதிமுறைகள் :
  • தேர்வறைக்குள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். இல்ல என்றால் அனுமதிக்கப்பட மாட்டார்கள்
  • தேர்வு நேரம் 11.00 மணி முதல் 12.20 மணி வரை. தேர்வு அறைக்குள் 11.15 மணிக்கு மேல் கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டார்கள்.
  • தேர்வு மையத்திற்குள் தேவை இல்லாமல் யாருடனும் பேசவோ, சைகை செய்யவோ தேர்வு பற்றி விவாதிக்கவோ கூடாது. அவ்வாறு செய்தல் தேர்வறையினை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.

TN Police “FB Group” Join Now

  • தேர்வு எழுதும் அறையை தவிர அவ்வளாகத்தில் வேறு எங்கும் செல்ல கூடாது. தேர்வு எழுதும் நேரத்திற்கு முன்னரே தேர்வினை முடித்தாலும் எவரும் தேர்வு அறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள்.
  • தேர்வு எழுத வரும் விண்ணப்பதாரர்கள் தங்களின் வாகனங்களை காவல் துறையினர் ஏற்பாடு செய்துள்ள இடங்களில் நிறுத்திக் கொள்ளலாம்.
  • தேர்வு முடித்த பின் உறுப்பினர் அனைத்து பணிகளையும் முடித்த பின்னர் அவரின் அனுமதியுடன் தேர்வறையை விட்டு வெளியேறலாம்.

Try Now Free Test

கடைசி நாள் துளிகள் !!
  • இறுதி நாளில், எந்த புதிய தலைப்பையும் கற்றுக்கொள்ள வேண்டாம் அது குழப்பத்திற்கு வழிவகுக்கும்.
  • முந்தைய வினாத்தாள்கள் அடிப்படையில் தேர்வு எழுதுவது போல் சுய பரிசோதனை செய்து கொள்ளலாம்.
  • பகுத்தறிவு பிரிவு கேள்விகளுக்கு விடையளிக்க வேகமான பயிற்சி எடுத்துக் கொள்ளுதல் நன்று.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!