தமிழ்நாடு போலீசார் அதிரடி – ஒரே இரவில் 560 ரவுடிகள் கைது! பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!
தமிழகம் முழுவதும் நேற்று இரவு டிஜிபி சைலேந்திர பாபு அவர்களின் உத்தரவின் பேரில் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். இதில் 560 ரவுடிகள் கைது செய்யப்பட்டு, பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போலீஸ் ரெய்டு:
தமிழகத்தில் காவல்துறை சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் காவலர்கள் தொற்று அச்சத்திலும் சாலைகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு தொற்றை ஒழிக்க பேருதவி புரிந்தனர். அதனை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் கொலை, கொள்ளை சம்வங்கள் தொடந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபுஅவர்களின் உத்தரவின் பேரில் நேற்று இரவு பல மாவட்டங்களில் ரெய்டு நடைபெற்றது.
தமிழகத்தில் ஆண்டறிக்கை சமர்ப்பிக்காத சங்கங்களுக்கு எச்சரிக்கை – பதிவுத்துறை அதிரடி!
சென்னை, மதுரை, திண்டுக்கல், நெல்லை, தேனி, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்த ரெய்டு நடத்தப்பட்டது. இதில் சென்னையில் 700 இடங்களில் நடந்த சோதனையில் 70 ரவுடிகளும், ராமநாதபுரத்தில் 79 ரவுடிகள், திண்டுக்கல்லில் 44 ரவுடிகள், சிவகங்கை 37, திருவள்ளூரில் 45 ரவுடிகள் பெரம்பலூரில் 6, புதுக்கோட்டையில் 13, கன்னியாகுமரியில் 39, நெல்லையில் 37, தென்காசியில் 73, திருவாரூரில் 8 ரவுடிகள், தஞ்சையில் 62 ரவுடிகள் என மொத்தம் 560 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கல்வி நிறுவனங்களுக்கு ஓர் நற்செய்தி – காப்புரிமை கட்டணத்தில் 80% குறைப்பு!
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று நடந்த ஸ்டோரிமிங்க் ஆப்ரேசனில் கைதானவர்களிடம் இருந்து 256 அரிவாள்கள், கத்தி மற்றும் 3 துப்பாக்கிகள் போன்ற பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நேற்று இரவு கைது செய்யப்பட்ட ரவுடிகளிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.