தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு – இன்று நள்ளிரவு முதல் அமல்!
தமிழகத்தில் பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ரூ.3 குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவது குறித்து நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பெட்ரோல் வரி குறைப்பு:
தற்போது நாளுக்கு நாள் பெட்ரோலின் விலை அதிகரித்து வருவது நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கிறது. வரி விகிதம் அதிகமாக இருப்பது தான் இதற்கு காரணம் என்பதால் பெட்ரோல் மீதான மாநில அரசின் வரியில் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கலில் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதனை தொடர்ந்து தமிழகத்தில் பெட்ரோல் மீதான வரி குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றவர்களின் விவரம் – சேகரிக்க உத்தரவு!
தமிழகத்தில் தி.மு.க அணி தேர்தல் வாக்குறுதிகளாக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்திருந்தது. அதில் மகளிருக்கான இலவச பேருந்து பயணம், குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை மற்றும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு முதலியன அடங்கும். தற்போது திமுக வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இந்திய உள்நாட்டு விமான பயண கட்டணங்கள் 12.82% அதிகரிப்பு – மத்திய அரசு அதிர்ச்சி அறிவிப்பு!
தற்போது பெட்ரோல் விலை குறைக்கப்பட்டு உள்ளது பொதுமக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.102.49க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலை குறைப்பின் காரணமாக பெட்ரோல் விலை மீண்டும் 2 இலக்கத்திற்கு வர உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழகத்தில் பெட்ரோல் விலை 100க்கும் கீழ் வந்துள்ளது.