பாரா மெடிக்கல் கலந்தாய்வு அடுத்த வாரத்தில் துவக்கம் !!!!
தமிழகத்தில் பாரா மெடிக்கல் படிப்புகளுக்கு கலந்தாய்வு ஆனது அடுத்த வாரம் முதல் தொடங்கப்பட உள்ளதாக மருத்துவ கல்வி தேர்வு குழு அறிவித்து உள்ளது.
பாரா மெடிக்கல் கலந்தாய்வு :
தமிழகத்தில் வருடந்தோரும் மருத்துவ பட்ட மற்றும் பட்டய படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெற்று அதன் பிறகு மாணவர் சேர்க்கை நடைபெறும். இவை 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே கலந்தாய்வு நடைபெறும். எப்போதும் இந்த பணிகள் மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வுகள் முடிவடைந்த பின்னரே நடைபெறும்.
வேலைவாய்ப்பு செய்திகள்
ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக நீட் தேர்வு தாமதிக்கப்படுவதால் அதற்குள்ளாக பாரா மெடிக்கல் கலந்தாய்வினை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
விரைவில் அறிவிப்பு :
இதனால் பாரா மெடிக்கல் படிப்புகளுக்கான கலந்தாய்வு அடுத்த வரம் முதல் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கலந்தாய்வுக்கான தேதி, அறிவிப்பு, விண்ணப்பப்படிவம் திரும்ப செலுத்தும் தேதி, படிவம் பெறும் முறை உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும் ஆலோசனைக்கு பின்னர் அறிவிக்கப்படும் என மருத்துவ கல்வி தேர்வு குழுவினர் அறிவித்து உள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்