தமிழக அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம் – ஜாக்டோ ஜியோ எதிர்பார்ப்பு!
தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் நடைமுறைப்படுத்துவார் என்று நம்புவதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
முதல்வரின் அறிவிப்புகள்:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பட்ஜெட் தாக்கல் செய்த போது அந்த நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கான அறிவிப்புகள் ஏதும் இடம் பெறவில்லை என்று அரசு ஊழியர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டினர். மேலும் அரசு ஊழியர்கள் அதிகம் எதிர்பார்த்த அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புகள் இடம் பெறவில்லை. இது அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை எதிர்த்து அரசு ஊழியர்கள் மாவட்ட தலைநகரங்களில் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தக பைகளில் தலைவர்கள் படம் – நீதிமன்றம் உத்தரவு!
திமுகவினர் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் தற்போது வரை இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் 110 வது விதியின் கீழ் முதல்வர் 2022ம் ஆண்டு ஜனவரி 1 முதல் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான 13 முக்கிய சிறப்பு அறிவிப்புகளும் இடம் பெற்றுள்ளது.
Jio Phone Next செப்.10ம் தேதி வெளியீடு – பயனர்களிடையே வரவேற்பு!
முதல்வரின் அறிவிப்புகளுக்கு ஜாக்டோ-ஜியோ வரவேற்பு அளித்துள்ளது. மேலும் முதல்வருக்கு தனது நன்றியும் தெரிவித்துள்ளது. திமுக அரசு என்றைக்குமே ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் இடையேயான நல்லுறவை பேணிப் பாதுகாக்கும் என்பதனை நிரூபிக்கும் விதமாக அறிவிப்புகள் அமைந்துள்ளன என்றும் கூறியுள்ளனர். மேலும் இந்த அரசு ஊழியர்கள் நலனில் எப்போதுமே அக்கறை கொண்டு அவர்களது நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு படிப்படியாக, நிச்சயமாக, உறுதியாக நிறைவேற்றும். அதே போல தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் நடைமுறைப்படுத்துவார் என்று நம்புவதாக ஜாக்டோ ஜியோ தெரிவித்துள்ளது.