நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை – இடி, மின்னலுடன் கனமழை தொடரும்!

0
நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - இடி, மின்னலுடன் கனமழை தொடரும்!
நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - இடி, மின்னலுடன் கனமழை தொடரும்!
நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை – இடி, மின்னலுடன் கனமழை தொடரும்!

தமிழகத்தில் பருவமழைக்காலம் கடந்த வாரம் தொடங்கி உள்ளதால் கனமழை அடிக்கடி பெய்து வருகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ரெட் அலர்ட்:

தமிழகத்தில் நடப்பு ஆண்டில் பருவமழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே பரவலாக மழை பெய்து வந்தது. சில நாட்களுக்கு முன்பாக பருவ மழை தொடங்கியதில் இருந்து அனைத்து மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த வாரம் தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வங்க கடலில் தற்போது ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை பகுதியானது, அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற உள்ளது.

தேனி மாவட்டத்தினர்களுக்கு ஹேப்பி நியூஸ் – நாளை (நவ.11) வேலைவாய்ப்பு முகாம்! முழு விபரம் இதோ!

Exams Daily Mobile App Download

இதனால் இன்று தமிழகத்தின் பல மாவட்டங்கள் மற்றும் புதுவையில் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், நாளைய தினம் திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதை தவிர தென் மாவட்டங்களில் கூடுதலாக மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழை நிலவரமானது நவம்பர் 14ம் தேதி வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வானிலை முன்னறிவிப்பின் படி முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!