தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை எப்போது? – சென்னை வானிலை மைய இயக்குனர் தகவல்!
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் கடந்த 1 வார காலமாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை:
தமிழகத்தில் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக அளவு மழை பெய்து வருகிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் கேரளாவில் பெய்ய தொடங்கிய தென்மேற்கு பருவ மழை காரணமாகவும் தமிழகத்தில் கோடை காலத்தில் கூட கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையால் முக்கிய அணைகள் மற்றும் பிற நீர் நிலைகள் நிரம்பியது. இதனால் உபரி நீர் வெளியேறி பொது இடங்களில் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்தது.
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் கடந்த வாரம் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இந்த புயலால் தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. அதே போல உத்திர பிரதேசம், அசாம், மேகாலயா, வங்காள தேசம் ஆகிய வட மாநிலங்களிலும் மழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தை பொறுத்தவரை அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஆதாருடன் வாக்காளர் அட்டையை இணைத்து விட்டீர்களா? ஆட்சியர் வெளியிட்ட தகவல்!
Exams Daily Mobile App Download
தற்போது இந்த புயலானது வங்கதேசத்தில் டிங்கோனா மற்றும் சாண்ட்விப் பகுதியில் நேற்று இரவு கரையை கடந்துள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்தாக தமிழக்த்தில் அக். 29ம் தேதியில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் அக்.29,30 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.