தமிழக அரசின் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் நவம்பர் 1 ம் தேதி முதல் 1 – 8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் கற்றல் இடைவெளியை குறைக்கும் விதமாக இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதன்முதலாக நாளை முதல்வர் விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கி வைக்கிறார்.
‘இல்லம் தேடி கல்வி’ திட்டம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் மாணவர்களின் கல்வி குறித்து ஆலோசிக்கப்பட்டு பள்ளிகள் திறக்க தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு முதல் கட்டமாக முதலில் 9 – 12 வரையிலான வகுப்புகளுக்கு மட்டும் கடந்த செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் வழக்கம் போல நடைபெற்று வருகிறது. அடுத்த கட்டமாக 1 – 8 வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகள் திருப்பி குறித்து கருத்துக்கள் கேட்டறியப்பட்டு ஆலோசனை நடத்தப்பட்டது.
Android ஸ்மார்ட்போனில் ஆட்டோ-கரெக்ட்டை சரிசெய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
அதன் படி தற்போது பல்வேறு கட்ட விவாதங்களுக்கு பிறகு கடைசியாக நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரி செய்யும் விதமாக இந்த இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதல்கட்டமாக காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி உட்பட 12 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ரேஷன் கடைகள் நவ.1 முதல் இரவு 7 மணிவரை செயல்படும் – அமைச்சர் உத்தரவு!
இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தில் வகுப்புகள் பள்ளி முடிந்த பிறகு தினமும் மாலை 5 மணி இரவு 7 மணி வரை ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் நடத்தப்பட வேண்டும். வகுப்புகளுக்கான பாடத் திட்டத்தை மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்து வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதன்முதலாக நாளை முதல்வர் விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கி வைக்கிறார்.