தமிழகத்தில் பேருந்து சேவைகள் நிறுத்தம் – பயணிகள் அதிர்ச்சி!!
தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தனியார் பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. 50 சதவீத பயணிகள் கொண்டு இயக்கினால் வருவாய் இழப்பு ஏற்படும் என உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பேருந்து நிறுத்தம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் தொற்று பரவல் தொடந்து அதிகரித்து வருகிறது. சுமார் 1 இலட்சம் பேர் மாவட்டங்கள் தோறும் சிகிக்சை பெற்று வருகின்றனர். மாநில அரசு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரபடுத்தி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மட்டும் வார இறுதி ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் நோய் பரவல் குறையாமல் தினந்தோறும் புதிய உச்சம் அடைந்து வருகிறது. இதனால் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் மே 6 ம் தேதி முதல் 20ம் தேதி வரை அமலில் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது. இதன்படி கடைகள் அனைத்தும் மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும்.
ஆக்சிஜன் தேவைக்கு இணையத்தில் விண்ணப்பம் – அரசு அறிவிப்பு!!
மேலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட வேண்டும். தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் 50 சதவீத பயணிகளை கொண்டு இயங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். இதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவது நிறுத்தப்படுவதாக பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 50 சதவீத பயணிகளை கொண்டு பேருந்தை இயக்கினால் வருவாய் இழப்பு ஏற்படும் என பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்