தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே 7.5% இட ஒதுக்கீடு!
தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்றவர்களுக்கு மட்டுமே நீட் தேர்வில் மூலம் மருத்துவ படிப்பின் மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இட ஒதுக்கீடு:
தமிழகத்தில் உயர் கல்வியில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பொறியியல், வேளாண்மை, சட்டம் போன்ற தொழில் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் 7.5% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அதே போல நீட் தேர்வின் மூலம் மருத்துவ படிப்புகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கும் 7.5% இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இந்த இட ஒதுக்கீடு கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.
தற்காலிக அரசு ஊழியர்களும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு பெறலாம் – தமிழக அரசு!
இந்த சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளி மாணவர்கள் எங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தற்போது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் தொழிற்கல்விகான இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. தற்போது இந்த இட ஒதுக்கீட்டை நடைமுறைபடுத்துவதற்கான நிபந்தனைகளை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
Airtel நிறுவனத்தின் அசத்தலான மூன்று ப்ரீபெய்ட் திட்டங்கள் – டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அம்சத்துடன்!
அதன்படி 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் 7.5% சிறப்பு இட ஒதுக்கீட்டில் பயன்பெற முடியும் என்று தெரிவித்துள்ளார். 8ஆம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்து விட்டு 9 ஆம் வகுப்பு அரசு பள்ளியில் சேர்ந்து படித்தால் தொழிற்படிப்புகளில் இந்த 7.5% இடஒதுக்கீடு கிடைக்காது என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.