தமிழகத்தில் சட்ட படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை – ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்!!

0
தமிழகத்தில் சட்ட படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை - ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்!!
தமிழகத்தில் சட்ட படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை - ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்!!
தமிழகத்தில் சட்ட படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை – ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்!!

சட்ட படிப்புகளுக்கான இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, ஏப்ரல் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகம் திருச்சி மாநகரில் அமைந்துள்ளது. சட்டம் பயில விரும்பும் மாணவர்களுக்கு தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த சட்ட கல்லூரியில் மாணவர்களுக்கு பிஏஎல்எல்பி (ஆனர்ஸ்), பிகாம்.எல்எல்பி (ஆனர்ஸ்), எல்எல்எம் (பெருநிறுவன சட்டம், அறிவுசார் சொத்துரிமை, இயற்கைவள சட்டம்) ஆகிய படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.

TN Job “FB  Group” Join Now

இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பெங்களூரு தேசிய சட்ட பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. இந்த படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதன்படி இளங்கலை மற்றும் முதுகலை ஆனர்ஸ் படிக்க விரும்பும் மாணவர்களின் அடுத்த கல்வியாண்டிற்கான (2021-2022) மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.

தமிழக கோவில்களில் புத்தாண்டு வழிபாடு கிடையாது – கொரோனா பரவல் எதிரொலி!!

இந்த மாணவர் சேர்க்கை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக www.consortiumofnlus.ac.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். இந்த பட்டப்படிப்புகளுக்கு தமிழக அரசின் முதல்தலைமுறை பட்டதாரி உதவித்தொகை, ஆதி திராவிடர் உதவித்தொகை ஆகியவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!