படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற மானியத்துடன் விண்ணப்பிக்கலாம் !!!!!

0
படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற மானியத்துடன் விண்ணப்பிக்கலாம்
படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற மானியத்துடன் விண்ணப்பிக்கலாம்

படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற மானியத்துடன் விண்ணப்பிக்கலாம் !!

படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும் என காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார். இது குறித்து ஒரு செய்தி குறிப்பு வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளவையாவன,

சிறுதொழில்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட தொழில் மையங்கள் வாயிலாக படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும் திட்டம் காஞ்சிபுரத்தில் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் ரூ. 1.25 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இவற்றில் 25% மானியமாக கணக்கிடப்படும். இதற்கு 18 முதல் 35 வயது வரை இருப்பவராகவும், 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கவும் இருக்க வேண்டும். காஞ்சிபுர மாவட்டத்தில் இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

படித்த இளைஞர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக மாற்றும் நோக்கில் ரூ. 30 லட்சம் வரை கடனுதவி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு 21 வயது நிறைந்தவராகவும், பட்டப்படிப்பு, பட்டாய படிப்பு மற்றும் தொழில்நுட்ப பயிற்சி வகுப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கவும் இருக்க வேண்டும். மேலும் முதல் தலைமுறை தொழில் முனைவோராகவும் இருக்க வேண்டும். இதில் 50 % வாய்ப்பு பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31 தேதி வரை கடன் வழங்கப்படும் பயனாளிகளுக்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நேர்முகத்தேர்வு மற்றும் தொழிற்பயிற்சி ஆகியவற்றில் இருந்து தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது. எனவே இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர் என்ற http://msmeonline.in.gov.in/ இணையதளத்தின் மூலம் பதிவு செய்து பயன் பெறலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!