TN MRB வேலைவாய்ப்பு 2022 குறித்த முக்கிய அறிவிப்பு – இடைத்தரகர்களை நம்ப வேண்டாம்!
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இடைத்தரகர்கள் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் இது குறித்து முக்கிய அறிவிப்பை வெளிட்டுள்ளது.
முக்கிய எச்சரிக்கை
கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏராளமானோர் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனர். இதனால் இடைத்தரகர்கள் வேலை வாங்கி தருவதாக பொய்யான வாக்குறுதிகளை கூறி அவர்களிடம் அதிகமான பணத்தை பெற்று ஏமாற்றி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து தற்போது மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் இது குறித்து முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, மருத்துவத் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் துறைத்தலைவர்களின் பரிந்துரைப்படி தேவைக்கேற்ப நிரப்படும்.
தமிழகத்தில் நாளை (ஜன.6) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
மேலும் குறிப்பிட்ட பணியிடங்களுக்கு உரிய கல்வித் தகுதியுடன் அரசு அறிவித்த பொது விதி மற்றும் சிறப்பு விதிகளின் படி அறிக்கைகள் மருத்துவத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். இதன் மூலமாக தான் காலிப்பணியிடங்களுக்கு தகுதியான பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதனால் விண்ணப்பதாரர்கள் அனைவரும் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தை மட்டும் பின்பற்றி அறிவிப்புகள் வெளியிட்ட பின் விண்ணப்பித்து தங்களை தயார்படுத்தி கொண்டு தேர்வில் வெற்றி பெற வேண்டும்.
தமிழக அரசின் பொங்கல் பரிசுக்கான டோக்கன் பெறாதோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அத்துடன் போலியான இணையதளத்தையும், இடைத்தரகர்களையும் நம்ப வேண்டாம் என்று மருத்துவ வாரியம் அறிவித்துள்ளது. இந்த இடைத்தரகர்களின் வாக்குறுதிகளை விண்ணப்பதாரர்கள் யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இடைத்தரகர்களை நம்பி அதனால் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும் எந்தவித இழப்பீடுக்கும் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் பொறுப்பேற்காது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் அனைவரும் அதிகாரப்பூர்வ இணையதளத்தை மட்டுமே பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.