தமிழகத்தில் மருத்துவ கல்வி நிறுவனங்கள் இன்று முதல் திறப்பு – அரசு அனுமதி!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள மருத்துவ கல்வி நிறுவனங்களை திறக்க அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில் இன்று (ஆகஸ்ட் 16) முதல் நேரடி வகுப்புகள் துவங்கியுள்ளது.
கல்லூரிகள் திறப்பு
கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக நாடு முழுவதுமுள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வி பெருமளவு பாதிக்கப்பட்டது. அதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 2 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள மருத்துவ கல்வி நிறுவனங்களை அரசு மீண்டுமாக திறக்க அனுமதி கொடுத்துள்ளது. அந்த வகையில் MBBS, BDS மற்றும் நர்சிங் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் இன்று (ஆகஸ்ட் 16) முதல் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது.
OLA Electric Scooter 2 மாடல்களில் அறிமுகம் – விலை மற்றும் அம்சங்கள் குறித்த முழு விவரம்!
இதையடுத்து மருத்துவக்கல்வி இயக்குனரகம் பிறப்பித்துள்ள அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 2 ஆம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் துவங்கியுள்ளது. அதன் படி வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் 48 மணி நேரத்திற்கு முன்பாக கொரோனா நெகட்டிவ் சான்றிதழை பெற்றிருக்க வேண்டும் எனவும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தியிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவிர அதிகளவு மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட வகுப்புகளை பிரித்து நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் மாணவர்கள் அனைவரும் கல்வி நிறுவன வளாகங்களில் முகக்கவசங்களை அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதலாக விடுதிகளில் இருக்கும் மாணவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தனி அறையை ஒதுக்கீடு செய்வது, உணவகங்களில் பார்சல் முறையை பின்பற்றுவது போன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.