தமிழகத்தில் மே 1 முதல் பள்ளிகள் மூடல் & முழு ஊரடங்கு அமல்? வைரலாகும் செய்தியின் உண்மை நிலவரம் இதுதான்!
இந்தியாவில் கொரோனா தொற்றின் 4வது அலை தீவிரம் அடைந்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் மே 1 முதல் முழு ஊரடங்கு அமல் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளதாக தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த தகவலை பார்த்து மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். இந்த செய்தியின் உண்மை நிலவரம் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்
வைரலாகும் செய்தி:
சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் முறையாக கொரோனா பாதிப்பு மனிதர்களிடையே கண்டறியப்பட்டது. அதன் பிறகு, உலக நாடுகளில் இந்த தொற்று பாதிப்பு அசூர வேகத்தில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஊரடங்கில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அடுத்து, மற்ற நாடுகளில் கொரோனா பரவல் குறைந்து வந்தது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளும் முழு வீச்சில் போடப்பட்டு வருகின்றன. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டன. இந்நிலையில் கொரோனா வைரஸ் சீனாவில் மீண்டும் அதிவேகமாக பரவி வருகிறது. சீனாவின் பல மாகாணங்களும் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் லாக்டவுனை முழு வீச்சில் அமல்படுத்தி இருக்கின்றன. சீன அரசு, பூஜ்ஜிய கோவிட் பாலிசியை சீன அரசு கடைபிடித்து வருவதால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
இதனால் உலகின் பிற பகுதிகளுக்கும் சீனாவின் புதிய கொரோனா வைரஸ் பரவுமோ என்ற அச்சம் நிலவி வந்த சூழலில் மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் தினசரி தொற்று எண்ணிக்கை சிறிது அதிகரித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டன. மேலும் வரும் ஜூன் மாதம் 4 வது அலை உச்சத்தில் இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க முதல்வர் தலைமையில் நேற்று முன் தினம் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் பேசுகையில் வடமாநிலங்களிலும் சென்னை ஐஐடியிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க நம்மிடம் இருக்கும் ஆயுதம் கொரோனா தடுப்பூசி. தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக தடுப்பூசி போட வேண்டும். அது போல் மக்கள் பொது இடங்களில் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும் மற்றும் தனிநபர் இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். கொரோனா பரவலை தடுக்க அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இதையடுத்து மே 1 முதல் மீண்டும் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இந்த தகவல் போலியான தகவல் ஆகும். ஏனென்றால் முதல்வர் இது குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பையும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.