தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அச்சம் – பொழுதை கழிக்க திட்டம்!!
பொழுதை கழிக்க திட்டம் :
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வீதிகள் தோறும் வெறிசோடி காணப்பட்டது. கடைகள், அலுவலகங்கள் மற்ற வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு இருந்தாது. வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாததால் மக்கள் தாயம், சீட்டுக்கட்டு, கேரம்போர்டு, செஸ் போர்டு, திருடன் போலீஸ் விளையாட்டு, பல்லாங்குழி உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி பொழுதை கழித்தனர்.
தற்போது இரண்டாம் கொரோனா அலை தீவிரமாக பரவி வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் இந்தியாவில் தினந்தோறும் லட்சக்கணக்கானோர் கொரோனாவால் மேலும் பாதிக்கப்படுகிறார்கள், ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். தொற்று அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமலும் ஆக்ஸிஜன் இல்லாமலும் நோயாளிகள் அவதியுறுகிறார்கள். மேலும் இந்தியாவுக்கு சில வாரங்களுக்கு கட்டாய முழு ஊரடங்கு தேவை என பல நாடுகள் அறிவுறுத்துகின்றன.
12 மாநிலங்களில் 1 லட்சம் கொரோனா நோயாளிகள் – மத்திய அரசு தகவல்!
கடந்த வருடத்தை போல முழு ஊரடங்கு அமல்படுத்தினால் தான் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியம் என வல்லுநர்கள் கூறுகின்றன. தற்போதைய கொரோனா இரண்டாம் அலை அதிக பாதிப்பை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றன. மேலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது புதிய அரசு ஆட்சிக்கு வந்தால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளதால் மக்கள் ஊரடங்கு காலத்தில் பொழுதை கழிக்க தாயக்கட்டை, பரமபதம், செஸ் போர்டு, கேரம், சைனீஸ் செக்கர்ஸ் உள்ளிட்ட விளையாட்டுகளை ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்