தமிழகத்தில் ஜூன் 21க்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு? பொதுமக்களின் எதிர்பார்ப்பு இதுதான்!

3
தமிழகத்தில் ஜூன் 21க்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு? பொதுமக்களின் எதிர்பார்ப்பு இதுதான்!
தமிழகத்தில் ஜூன் 21க்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு? பொதுமக்களின் எதிர்பார்ப்பு இதுதான்!
தமிழகத்தில் ஜூன் 21க்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு? பொதுமக்களின் எதிர்பார்ப்பு இதுதான்!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும் நிலையில் வருகிற ஜூன் 21ம் தேதிக்கு பின்னர் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் பேருந்துகள் இயக்கம் போன்ற தளர்வுகளை எதிர்பார்ப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

ஊரடங்கு நீட்டிப்பு:

தமிழகம் முழுவதும் கொரோனா 2வது அலை மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதனை கட்டுப்படுத்த புதிதாக தலைமையேற்று உள்ள முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முதற்கட்டமாக வாரஇறுதி மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இது அதிகளவு பலன் தராத காரணத்தால் மே 10 முதல் மாநிலம் தழுவிய முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என முதல்வர் அறிவித்தார். இதில் கடைகள் திறப்பு உள்ளிட்ட சில தளர்வுகள் அளிக்கப்பட்டன.

ஜூன் 14 முதல் பேருந்துகள் இயங்க அனுமதி – மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு!

இருப்பினும் மறுபுறம் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. இதனை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் தலைமையில் பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடைபெற்றது. இதன் முடிவில் ஜூன் 24 முதல் எவ்வித தளர்வுகளும் இன்றி தீவிர முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்னர் 2 நாட்கள் மாலை வரை கடைகள் திறப்பு, வெளியூர் செல்லும் பேருந்துகள் இயங்க அனுமதி உள்ளிட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டன. அடுத்த 2 வார காலத்திற்கு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. தேவையின்றி வெளியே சுற்றுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் அபராதம் விதித்தனர்.

ஆதார், பான் கார்டு ஆன்லைனில் இணைப்பது எப்படி? ஜூன் 30 கடைசி நாள்!

மறுபுறம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இதன் விளைவாக கொரோனா பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. தினசரி 35 ஆயிரம் வரை பதிவு செய்யப்பட்டு வந்த புதிய தொற்று எண்ணிக்கை தற்போது 15 ஆயிரமாக குறைந்துள்ளது. இதனால் ஜூன் 7 முதல் 14 வரை நீட்டிக்கப்பட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. கடைகள் மாலை 5 மணிவரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் மட்டும் குறைந்த அளவு தளர்வுகள் மட்டுமே வழங்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த ஜூன் 11ம் தேதி ஏற்கனவே அமலில் உள்ள முழு ஊரடங்கு மேலும் பல தளர்வுகளுடன் ஜூன் 21ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார். இதில் 27 மாவட்டங்களில் அரசு இ-சேவை மையங்கள், டீ கடைகள் (பார்சல் மட்டும்) டாஸ்மாக் கடைகள், குளிர்சாதன வசதி இன்றி சலூன், அழகு நிலையங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழகம் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

Work From Home பணியாளர்கள் கவனத்திற்கு – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!!

இதனால் ஜூன் 21ம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டால் பேருந்து போக்குவரத்தித்திற்கு அனுமதி, தனியார் நிறுவனங்கள் முழு திறனுடன் செயல்பட அனுமதி, இ-பதிவு முறை ரத்து உள்ளிட்ட கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்து உள்ளனர். மேலும் என்னென்ன தளர்வுகள் அல்லது கட்டுப்பாடுகள் அமல்படுத்தலாம்? என்று தங்களது பரிந்துரைகளை பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

  1. சாலையோர சிறு குளிர்பான கடைகள் மற்றும் வியாபாரிகளுக்கு இந்த 11 மாவட்டங்களில் அடுத்த ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!