தமிழகம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்? ஓமைக்ரான் நோய்த்தொற்று எதிரொலி!
தமிழகத்தில் தொடர்ந்து உருமாறிய கொரோனா வகையாக கண்டறியப்பட்ட ஓமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்த தொற்று பரவல் காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஊரடங்கு:
நாடு முழுவதும் தற்போது கொரோனா குறைந்து வருவதை தொடர்ந்து உருமாறிய கொரோனா வகையாக கண்டறியப்பட்டுள்ள ஓமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்த ஓமைக்ரான் தொற்று இதுவரை இந்தியாவில் 100க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாக சென்னை வந்த ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிச.20 முதல் ஜன.7 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!
இவ்வாறாக இந்தியாவில் ஓமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஒமைக்ரான் தொற்று பரவலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க அனுமதி வழங்குமாறு தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் தமிழகத்தில் ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 25க்கும் மேற்பட்டவர்களுக்கு S வகை மரபணு மாற்றம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – ஜாக்பாட் அறிவிப்பு!
இவர்களில் 4 பேர் ஓமைக்ரான் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளான தென் ஆப்பிரிக்க மற்றும் நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதனை கருத்தில் கொண்டு அனைத்து நாடுகளில் இருந்து வருவோரும் தனிமைப்படுத்தப்பட்டு பின் கொரோனா பரிசோதனையை கட்டயாமாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்கும் பட்சத்தில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கொரோனா மூன்றாவது அலையான ஓமைக்ரான் பரவலை தடுக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.