தமிழக அரசில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 2021 – நாளை கடைசி நாள்!
தமிழக அரசு பெண்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி சமூக பாதுகாப்பு துறையில் இருந்து புதிய பணியமர்த்தல் அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும், திறமையும் உள்ள பெண் விண்ணப்பதாரிகள் இந்த பணியிடங்களுக்கு 10.9.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி அறிவிப்பு:
தமிழக அரசின் கீழ் செயல்படும் சமூக பாதுகாப்பு துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மாவட்ட அலுவலகத்தில் Counsellors பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. Counsellors பணிகளுக்கு என 09 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கான கல்வித்தகுதியாக அரசு / யுஜிசி அனுமதி பெற்ற கல்லூரிகளில் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!
சமூக பாதுகாப்பு துறை பணிகளில் ஊதியமாக பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு வருகைக்கு அதிகபட்சம் ரூ.1,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் Interview வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அரிதிந்த்து கொள்ளலாம்.
திறமையானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு வரும் 10.09.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபங்களை அனுப்பிட வேண்டும். விண்ணப்பங்கள் அனுப்ப
முகவரி
The Superintendent,
Govt. Observation Home,
1094, Avinashi Road,
Coimbatore – 641037.