தமிழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ! – அனைத்து தகவல்களுடன் …
கல்வி நிலையங்கள்/நிறுவனங்களில் பயிலும் சிறுபான்மையினத்தை சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை ஆனது வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த கல்வி ஆண்டிற்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்குமாறு பல்வேறு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இருந்தும் தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
கல்வி உதவித்தொகை :
மத்திய அரசால் இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் இனத்தினை சேர்ந்தவர்கள் மட்டுமே சிறுபான்மையினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த இனத்தினை சேர்ந்த மாணவ மாணவியர்கள் அரசு, அரசு உதவி பெறும் அல்லது தனியார் தொழிற்கல்வி நிறுவனங்களில் படிப்பவர்களாக இருந்தால் அவர்கள் இந்த கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.
மேலும் அரசு, அரசு உதவி பெறும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை 3ம் ஆண்டு பயில்பவர்களாக இருந்தாலும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
தமிழ்நாடு அரசு உதவித்தொகை 2021 – அனைத்து பிரிவினருக்குமான தகவல்கள் !!
விண்ணப்பிக்கும் முறை :
இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வரும் டிசம்பர் 31 ஆம் தேதியே இறுதி நாள் ஆகும். அதற்குள் சம்பத்தப்பட்ட கல்வி நிறுவனங்களிலேயே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இது குறித்து மேலும் விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலரை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். மாவட்ட வாரியாக வெளியான அறிவிப்புகளை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் மேலும் பல தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
- திண்டுக்கல் – கிளிக் செய்யவும்
- சேலம் – கிளிக் செய்யவும்
- தூத்துக்குடி – கிளிக் செய்யவும்
- தென்காசி – கிளிக் செய்யவும்
- சென்னை – கிளிக் செய்யவும்
- புதுக்கோட்டை – கிளிக் செய்யவும்
- தஞ்சாவூர் – கிளிக் செய்யவும்
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |