தமிழகத்தில் IAS அதிகாரிகள் மாற்றம் – தலைமை செயலர் உத்தரவு!!
தமிழகத்தில் IAS அதிகாரிகளை மாற்றம் செய்து தலைமை செயலர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, பள்ளிக்கல்வித்துறை சிறப்பு செயலாளராக ஜெயந்தி IAS நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
IAS அதிகாரிகள் மாற்றம்
முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசாங்கம் பல்வேறு துறைகளை சார்ந்த IAS அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது. இது தொடர்பான உத்தரவுகளை தமிழக தலைமை செயலர் இறையன்பு பிறப்பித்துள்ளார். அந்த வகையில், தமிழக பள்ளிக்கல்வித்துறையின் சிறப்பு செயலாளராக IAS ஜெயந்தி என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதே போல நெல்லை மாவட்டத்திற்கு கார்த்திகேயன், தென்காசி மாவட்டத்திற்கு ரவிச்சந்திரன், விருதுநகர் மாவட்டத்திற்கு ஜெயசீலன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிரடியாக 6 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் – Philips நிறுவனம் முடிவு!!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதே போல, விழுப்புரம் மாவட்டத்திற்கு பழனி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஸ்ரீதர், பெரம்பலூர் மாவட்டத்திற்கு கற்பகம், கோவை மாவட்டத்திற்கு கிராந்திகுமார் பதி, திருவாவூர் மாவட்டத்திற்கு சாரு, தேனி மாவட்டத்திற்கு சஞ்ஜிவனா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதே போல ஆசிரியர் தேர்வு வாரிய கட்டுப்பாட்டு அலுவலராக வெங்கட் ப்ரியா மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குனராக லலிதா நியமனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.