தமிழகத்தில் 12ம் வகுப்பிற்கு செய்முறைத் தேர்வு – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், 12ம் வகுப்பிற்கு செய்முறைத் தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
அமைச்சர் விளக்கம்:
தமிழகம் முழுவதும் கொரோனா நோய்பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பள்ளிகள் தற்போது 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கி உள்ளன. மேலும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் விபரம் பதிவேற்றம், வினாத்தாள் தயாரித்தல், தேர்வு கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இது தொடர்பாக பேசினார்.
கள்ளக்குறிச்சி ஊரக வளர்ச்சி பணி மேற்பார்வையாளர் தேர்வு ரத்து – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
அவர் கூறுகையில், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்ட பின்னரே வெளியிடப்படும். மேலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை. இது குறித்து முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆலோசனை செய்தே முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்