தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில் – 100 டிகிரியை தாண்டி பதிவு!!
தமிழகத்தில் உள்ள 3 மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி செல்ஸியஸை தாண்டி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வெப்பம் வரும் நாட்களில் உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை அதிகரிப்பு
தமிழகத்தில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்த வெப்பத்தை தணிக்கும் விதமாக கடந்த ஒரு சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், சென்னை உள்ளிட்ட சில வடக்கு மாவட்டங்கள் மட்டும் திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட சில தென் மாவட்டங்களில் பரவலான அளவு மழை பெய்து வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
Bank அதிகாரியாக பணியாற்ற சிறந்த Online Class – Weekend batch தொடக்கம்! குறைந்த கட்டணத்தில்!
இந்த சூழலிலும் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி செல்ஸியஸை தாண்டி பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, மதுரை, கரூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியுள்ளது. அந்த வகையில், கரூர் மாவட்டம் பரமத்தியில் 101.3 என்ற அளவிலும், ஈரோட்டில் 101.12 என்ற அளவிலும், மதுரை விமான நிலையத்தில் 100.4 டிகிரி என்ற அளவிலும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த வெயில் அடுத்து வரும் நாட்களுக்கு மேலும் உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.