தமிழகத்தில் தேர்தலுக்கு பின்னர் ஊரடங்கு? சுகாதாரத்துறை செயலர் விளக்கம்!
கொரோனா பாதுகாப்பு பணிகளுடன் தேர்தல் நடத்தப்படும் என மாநில சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு பிறகு ஊரடங்கு என்பது வதந்தி என்ற தகவலையும் பகிர்ந்துள்ளார்.
ஊரடங்கு – போலியான தகவல்:
சட்டமன்ற தேர்தலின் போது நடைமுறைப்படுத்தப்படும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘தமிழக சட்டப்பேரவை பணிகளில் சுகாதார பணியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் இரண்டு சுகாதார பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் முகக்கவசம், சானிடைசர் அடங்கிய கிட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல கொரோனா பாதித்தவர்களும் பாதுகாப்பு கவசங்களுடன் தேர்தலில் வாக்கு செலுத்தும் விதமாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத வகையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டுமாக அதிகரித்து வருகிறது. அதனால் மக்கள் முகக்கவசங்களுடன் வெளியே செல்ல வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடித்து வாக்களிக்க வேண்டும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு – ஏப்ரல் 16ம் தேதி துவக்கம்!!
அதன்படி ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளது. பல மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதால், பொதுமக்கள் அனைவரும் ஒரே மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். இதுவரை தமிழகத்தில் 32 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பு மருந்துகள் போடப்பட்டுள்ளது. பொதுமக்களின் ஒத்துழைப்புடன் தமிழகத்தில் படிப்படியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அதே நேரம் தேர்தலுக்கு பின்னால் ஊரடங்கு என்ற வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம்’ எனவும் கூறியுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்