தமிழக சுகாதாரத்துறையில் 2,400 செவிலியர் & 2,448 ஆய்வாளர்கள் நியமனம் – அமைச்சர் அறிவிப்பு!

0
தமிழக சுகாதாரத்துறையில் 2,400 செவிலியர் & 2,448 ஆய்வாளர்கள் நியமனம் - அமைச்சர் அறிவிப்பு!
தமிழக சுகாதாரத்துறையில் 2,400 செவிலியர் & 2,448 ஆய்வாளர்கள் நியமனம் - அமைச்சர் அறிவிப்பு!
தமிழக சுகாதாரத்துறையில் 2,400 செவிலியர் & 2,448 ஆய்வாளர்கள் நியமனம் – அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் கிராமப்புற சுகாதார சேவையை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதனை தொடர்ந்து புதிதாக 2,400 செவிலியர்கள், 2,448 சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறியுள்ளார்.

சுகாதாரத்துறை நியமனம்:

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதில் பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டு, ஊரகப் பகுதிகளில் 50 வட்டாரங்கள் மற்றும் 3 மாநகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டமானது 11,086 பெண் சுகாதார தன்னார்வலா்கள் மூலமாக தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் விரிவுபடுத்தப்படும் என கூறியுள்ளார்.

தமிழக அரசு சார்பில் ‘கப்பலோட்டிய தமிழன்’ விருது – முதல்வர் அறிவிப்பு!

இந்த திட்டமானது ரூ.258 கோடி செலவில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் என கூறப்படுகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் செவிலியர் கண்காணிப்பு மையங்கள் ஏற்படுத்தி 1,583 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவுகள் ரூ.267 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும். கிராமப்புற சுகாதார சேவையை மேம்படுத்தவும், நோய் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் புதிதாக 2,400 செவிலியர்கள், 2,448 சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தொற்றை கண்டறிய தேவைப்படும் ஆய்வகங்களுக்கு புதிதாக 17 ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கருவிகள் ரூ.5.10 கோடியில் வழங்கப்படுவதாகவும், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அரிய வகை ரத்த சிவப்பணுக்கள் உறைநிலை சேமிப்பு பிரிவு ரூ.3.75 கோடியில் ஏற்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார். சென்னை டிஎம்எஸ் வளாக ஆய்வகத்தில் ரூ.4 கோடியில் மரபணு பகுப்பாய்வு கூடம் நிறுவப்படவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!