தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்தலாம் – அமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்தலாம் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதற்கு அரசு எந்தவித ஆட்சேபம் தெரிவிக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வேலைவாய்ப்பு செய்திகள்
அரையாண்டு தேர்வு !!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. தொற்றின் தாக்கம் முழுவதுமாக குறையாத வரை பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என்பதால் தற்போது வரை ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே பாடங்கள் நடத்தப்படுகிறது.
TN Police “FB Group” Join Now
பாடங்களை முழுமையாக இன்னும் முடிக்காத காரணத்தினால் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வினை ரத்து செய்து அறிவிப்பினை வெளியிட்டது. கடந்த வாரம் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பினால் மாணவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தனியார் பள்ளிகளின் விருப்பம் !
தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஒரு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார். அதில், தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்தலாம்; ஆட்சேபம் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் அரசு சரியாக செயல்படுவதால் பள்ளிக்கல்வித்துறை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட தேவையில்லை. 50% குறைப்பு மட்டும் மீதி நடத்தப்படும் பாடங்களில் இருந்து மட்டும் தான் தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |