தமிழகத்தின் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு – அமைச்சர் பேட்டி!

0
தமிழகத்தின் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு - அமைச்சர் பேட்டி!
தமிழகத்தின் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு - அமைச்சர் பேட்டி!
தமிழகத்தின் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு – அமைச்சர் பேட்டி!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதனை ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த திட்டத்தால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மாணவர் சேர்க்கை:

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்கு பல்வேறு நலத்திட்டங்களை பள்ளி கல்வித்துறை செயல்படுத்தி வருகிறது‌. அந்த வகையில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தினார். இத்திட்டம் முதற்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

அதன்படி காலை 8.30 மணிக்கு மாணவர்களுக்கு சத்தான மற்றும் தரமான உணவுகள் காலை சிற்றுண்டியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் இருக்கும் அனைத்து அரசு பள்ளிகளிலும் விரிவுபடுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் மணியனூருக்கு அருகே உள்ள தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பிறகு இவர் கூறியதாவது, காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் குறித்து ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கும் அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு இது தொடர்பான அறிக்கை தமிழக முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டத்தால் அரசு பள்ளிகளில் புதியதாக மாணவர் சேர்க்கையும் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!