TNPSC குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு – உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!!
குரூப் – 4 தேர்வு:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் தேர்வுகளை நடத்துகிறது. இதன் மூலம் அரசு அலுவலகங்களில் பணியாற்ற தேவைப்படும் ஊழியர்களை அரசு நியமனம் செய்கிறது. தேர்வில் விண்ணப்பதாரர் எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் பணியாளர் நியமனம் நடக்கும். ஆண்டுதோறும் குரூப்-4 தேர்வுகள் நடைபெறும்.
மாநில காவல்துறையில் 62 அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள் – 82,000 பட்டதாரிகள் விண்ணப்பம்!!
இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த குரூப்-4 தேர்வில் 16 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இது மாநிலம் முழுவதும் 5,575 மையங்களில் நடந்தது. தேர்வின் முடிவில் ராமநாதபுரம், ராமேஸ்வரம், கீழக்கரை பகுதிகளில் அமைக்கப்பட்ட இரண்டு தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களே அதிக அளவில் முன்னிலை பெற்றிருந்தனர்.
இதனால் இந்த தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் அவர்கள் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.
ஆவணங்கள்:
இந்த விசாரணையின் போது விசாரணை குழு கைப்பற்றிய ஆவணங்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை விசாரணை அதிகாரி நந்தகுமார் அவர்களுக்கு உத்தரவிட்டுள்ள்து. மேலும், வழக்கில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்