தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறையில் காலிப்பணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் ஒவ்வொன்றாக நிரப்பப்பட்டு வரும் வேளையில் தற்போது மக்கள் நல்வாழ்வுத்துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப் படும் என்று மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
காலிப்பணியிடங்கள்:
தமிழகத்தில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை 3 கொரோனா அலைகள் மக்களை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அரசு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து கொரோனா பரவலை தடுக்க முயற்சித்தது. இந்த ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் தொழில் நிறுவனங்கள் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இதனால் ஏராளமான பணியாளர்கள் தங்களின் வேலைகளை இழந்தனர். மேலும் அரசுத்துறை காலிப்பணியிடங்களும் கொரோனா பேரிடரால் நிரப்பப்படாமல் இருந்தது.
Degree முடித்தவர்களுக்கு நல்ல ஊதியத்தில் அரசு வேலை ரெடி..!
இதனால் பணியில் இருந்த ஊழியர்களின் வேலை பளு அதிகரித்து. இதன் காரணமாக மன உளைச்சலுக்கும் ஆளாகினர். இந்த நிலையில் கொரோனா தாக்கம் குறைந்து வந்ததை அடுத்து அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. இந்த நேரத்தில் வேலையிழந்தோர் மீண்டும் வேலை வாய்ப்புகளை தேடி வந்தனர். இதனையடுத்து அரசு மற்றும் தனியார் துறைகள் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டும் வேலை வாய்ப்பை அளிக்கும் நோக்கிலும் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு 13 நாட்கள் மட்டுமே கோடை விடுமுறை – அமைச்சர் திடீர் உத்தரவு!
தற்போது TNPSC தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. மேலும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பாகவும் காலிப்பணியிடங்கள் நிரப்பபட்டு வருகிறது. மற்ற துறைகளை தொடர்ந்து மக்கள் நல்வாழ்வு துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என அமைச்சர் தெரிவித்தார். மேலும் கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரியில் கூடுதல் சிறப்புப் பிரிவை அமைப்பதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.