தமிழகத்தில் 21 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – அரசு முக்கிய உத்தரவு!
தமிழக அரசாங்கம், 21 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு பெற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள் இடமாற்றம்
தமிழக அரசின் கீழ் உள்ள பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வரும் ஐபிஎஸ் அதிகாரிகள் இன்று (ஜனவரி 11) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் சுமார் 21 ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்புகளுடன் இடமாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ஐபிஎஸ் அதிகாரி மற்றும் கூடுதல் டிஜிபி ஆக பணியாற்றி வந்த சைலேஷ் குமார் யாதவ், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Follow our Twitter Page for More Latest News Updates
அதே போல, சென்னை காவல்துறை தலைமையக அதிகாரி ஐபிஎஸ் மனோகர் சென்னை பெருநகர காவல் துறை சட்டம் மற்றும் ஒழுங்கு இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர்களைத் தவிர மதுரை துணை ஆணையர் வனிதா, சேலம் துணை ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தவிர, 7 ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.