தமிழகத்தில் இன்று முதல் பேருந்து சேவைகள் தொடக்கம் – பொதுமக்கள் நிம்மதி!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 1 மாதத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தே பேருந்து சேவைகள் குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் இன்று முதல் மீண்டும் இயங்க தொடங்கி உள்ளன. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
பேருந்து சேவைகள்:
தமிழகத்தில் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டே வந்தது. இன்று முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் மாவட்டங்கள் அனைத்தும் 3 வகைகளாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஏற்கனவே அமலில் உள்ள தளர்வுகள் மட்டுமே தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு இ-பதிவு அவசியம் – முழு விவரம்!!
2வது வகையில் உள்ள 23 மாவட்டங்களில் கடைகள் திறப்பிற்கு கூடுதல் நேரங்கள் வழங்கப்பட்டு உள்ளது. 3வது வகையில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் பேருந்து சேவைகளை தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு உள்ளும், இடையிலும் 100 சதவீத பேருந்துகள் இன்று முதல் இயங்க தொடங்கி உள்ளன. இருப்பினும் 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் கொரோனா அச்சம் காரணமாக பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகிறது.
தமிழகத்தில் கோவில்கள் மீண்டும் திறக்க அனுமதி? அமைச்சர் விளக்கம்!
குளிர்சாதன வசதியின்றி பேருந்துகளை இயக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. செங்கல்பட்டில் இருந்து மதுராந்தகம், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கு 30 நிமிட இடைவெளியில் ஒரு பேருந்து என இயக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரத்தில் முக்கிய தொழிலான ஜவுளிக்கடைகள் மூடப்பட்டு உள்ளதால், பேருந்துகளில் பயணிகள் வரத்து குறைவாகவே உள்ளது. பயணிகள் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.