தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய நிர்ணயம் – ஒரு நபர் குழு அரசாணை வெளியீடு!!
ஊதிய உயர்வு முரண்பாடு:
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை ஏற்ற அரசு இதற்காக ஏழாவது ஊதியக்குழுவை அமைத்தது. அதன் பரிந்துரைப்படி ஊதிய உயர்வு அரசு பணியாளர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டது. இந்த ஊதிய உயர்வில் முரண்பாடுகள் இருப்பதாக பல தரப்பில் இருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
தமிழகத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு – மத்திய அமைச்சர் அறிவிப்பு!!
ஒரு நபர் குழு:
அரசு பணியாளர்களின் ஊதிய உயர்வில் உள்ள குளறுபடிகளை கலைவதற்காக நிதித்துறை செலவினங்கள் முதன்மை செயலர் சித்திக் தலைமையில் ஒரு நபர் குழுவை அரசு நியமித்தது. ஒரு நபர் குழுவானது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கத்தினரின் முக்கிய பிரதிநிதிகளை சந்தித்து கூட்டம் நடத்தினர். அதில் வழங்கிய மனுக்களை பரிசீலினை செய்து ஒரு நபர் குழு அறிக்கை ஒன்றை தயார் செய்தது.
ஊதிய உயர்வு:
ஒரு நபர் குழு தனது அறிக்கையை 2019 ஜூன் மாதம் அரசிடம் தாக்கல் செய்தது. அதனை ஏற்று ஒவ்வொரு துறையிலும் உள்ள ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்பட்டது. இதற்காக பிப்ரவரி 26ம் தேதி தனியாக அரசாணை வெளியிடப்பட்டது. இதன்படி, பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களின் ஊதியம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சியினை சீரும் சிறப்புமாக வழிநடத்திச் செல்லும் தமிழக முதல்வருக்கு அன்பு வணக்கங்களுடன் தமிழ்நாட்டில் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் போன்றோரின் ஊதியத்தை உயர்த்திடுவோம் வழிவகை செய்ய வேண்டும் இன்றளவும் கூட தற்போதைய உள்ள பொருளாதாரச் சூழலில் ரூபாய் 2000 சம்பளம் பெறும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளனர் இதனை கலைந்து அவர்களின் துயர் துடைத்திட உதவுமாறு வேண்டுகிறோம்