தமிழக அரசு பள்ளிகளில் 9,000 ஆசிரியர்கள் தேவை – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழக அரசு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். இந்த பணியிடங்களை நிரப்ப 9,000 ஆசிரியர்கள் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
காலிப்பணியிடங்கள்:
தமிழக அரசு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் TET தகுதித்தேர்வால் நிரப்பப்பட்டு வருகிறது. கடந்த 2022ம் ஆண்டில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கைகள் எழுந்த நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அதன் பிறகு கடந்த அக்டோபர் மாதம் TET முதல் தாள் தேர்வு நடைபெற்றது.
Exams Daily Mobile App Download
அடுத்ததாக TET தாள் – 2 தேர்வு பிப்ரவரியில் நடத்தப்படும் என்றும் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தமிழக அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலியிடங்களை பூர்த்தி செய்ய 9,000 ஆசிரியர்கள் தேவை என்று தெரிவித்துள்ளார்.
தற்போது பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாகவே ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர் என்றும் கூறினார். திருவாரூரில் பசுமை பள்ளி திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்த பின் பேசிய அவர் முதற்கட்டமாக 500 பள்ளிகளில் மட்டும் இத்திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. வரும் நாட்களில் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்தார்.