தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றம் – முக்கிய செயல்முறைகள் வெளியீடு!
தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். இந்த இடமாற்றத்திற்கான பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இடமாற்ற கலந்தாய்வு
தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக பகுதி நேர ஆசிரியர்கள் அவர்களது விருப்பத்தின் பேரில் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். இதற்கான பொது கலந்தாய்வை தமிழக பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இடமாற்றம் தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த உத்தரவில், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக பகுதி நேர ஆசிரியர்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு மார்ச் 15, 2023 அன்று நடைபெறும்.
Follow our Instagram for more Latest Updates
Post Office: ரூ.1400 முதலீடு செய்தால் ரூ.35 லட்சம் வரை ரிட்டன்ஸ் – சூப்பரான சேமிப்பு திட்டம்!
இந்த கலந்தாய்வு அந்தந்த மாவட்டத்திற்குள்ளும், வேறு மாவட்டங்களிலும் நடத்தப்படும். இந்த மாறுதல் தற்காலிக பகுதி நேர ஆசிரியர்களின் விருப்பத்தின்படி நடைபெறுவதால், அவர்களுக்கு மாறுதல் பயணப்படிகள் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரே பணியிடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இடமாறுதல் கோரினால் சில குறிப்பிட்ட தரவுகளின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அந்த செயல்முறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.