அரசு பள்ளி மாணவர்கள் ஐடிஐ , பாலிடெக்னிக் சேர்வதில் சிக்கல்

0
அரசு பள்ளி மாணவர்கள் ஐடிஐ , பாலிடெக்னிக் சேர்வதில் சிக்கல்
அரசு பள்ளி மாணவர்கள் ஐடிஐ , பாலிடெக்னிக் சேர்வதில் சிக்கல்

அரசு பள்ளி மாணவர்கள் ஐடிஐ , பாலிடெக்னிக் சேர்வதில் சிக்கல்

தனியார் பள்ளிகள் மதிப்பெண்களின் தாராளமயம் காட்டியதால் அரசு பள்ளி மாணவர்கள் ஐடிஐ , பாலிடெக்னிக் சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்று கொள்ளலாம்..

கொரோனா வைரஸ் பரவலினால் இந்த ஆண்டு 10 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு பள்ளி தேர்வுகளின் அடிப்படையிலேயே மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதன் படி மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண்களின் அடிப்பைடயிலேயே மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படியே தேர்வு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வு முடிவுகளை பொறுத்தே ஐடிஐ , பாலிடெக்னிக் சேர்க்கை நடைபெறும், அனால் இந்த ஆண்டு தனியார் பள்ளிகள் மதிப்பெண் வழங்குவதில் தாராளமயம் காட்டியதால் அரசு பள்ளி மாணவர்கள் ஐடிஐ , பாலிடெக்னிக் சேருவதில் சிக்கல் ஏற்படுவதாக தெரிகிறது. மாணவர்கள் மதிப்பெண் பட்டியலில் அரசு பள்ளி மாணவர்கள் பெயர்கள் கீழே தள்ளப்பட்டுவிட்டது.

இதனால் அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அரசு பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!